மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள மரப்பாலம் முள்ளிச்சேனை தோட்டம் ஒன்றின் வாடியில் அடித்து கொலை செய்யப்பட்ட நிலையில் ஆண் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டடுள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.
- Advertisement -
இச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தில் உயிரிழந்தவரின் நண்பன் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். மரப்பாலம் முள்ளிச்சேனையைச் சேர்ந்த 56 வயதுடைய கிருஷ்ணபிள்ளை நேசராசா என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
- Advertisement -
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த நபரும், அவருடைய நண்பனும் சம்பவதினமான நேற்று இரவு வீட்டிற்கு அருகாமையிலுள்ள தோட்டம் ஒன்றில் உள்ள வாடியில் மதுபானத்துடன் சென்று மது அருந்தியுள்ளனர்.
இந்நிலையில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் நண்பனை தாக்கியதாகவும் அதனையடுத்து தான் அங்கிருந்து தப்பி ஓடி காட்டில் ஒளிந்திருந்ததாகவும் கைதானவர் கூறியுள்ளார்.
அத்துடன் யானை பயத்தினால் அங்கிருந்து இன்று காலையில் வெளியேறி, உயிரிழந்த நண்பனின் வீட்டிற்கு சென்று நண்பனை அடித்து கொலை செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
அதன்பின்னர் அவர்களுடன் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை பார்த்ததாக கைது செய்யப்பட்டவரிடம் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு தடவியல் பிரிவினர் மற்றும் மேப்ப நாய் கொண்டுவரப்பட்டு தீவிர விசாரணையினை பொலிசார் முன்னெடுத்துவருகின்றனர்.
மேலும் சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் , மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.