இலங்கையில் கடந்த சில தினங்களுக்குள் நாடளாவிய ரீதியில் வீடுகளில் குழந்தை பிரசவிக்கும் சம்பவங்கள் அதிகரிப்பதை அவதானிக்கக்கூடியதாக உள்ளதாக அரச குடும்பநல சுகாதார சேவை சங்கம் தெரிவித்துள்ளது.
- Advertisement -
எரிபொருள் பிரச்சினை காரணமாக வைத்தியசாலைகளுக்கு செல்வதில் ஏற்பட்டுள்ள அசௌகரிய நிலை மற்றும் பொருளாதார பிரச்சினை காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதென அந்த சங்கத்தின் தலைவர் தேவிகா கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.
- Advertisement -
இதன்படி கடந்த 2 தினங்களில் நிகவெரட்டிய, பிட்டகோட்டே மற்றும் முகத்துவாரம் முதலான பிரதேசங்களில் இதுபோன்ற சில சம்பவங்கள் பதிவாகியுள்ளது.
குடும்பநல சுகாதார சேவை உத்தியோகத்தர்களின் ஒத்துழைப்புடன் இந்த பிரசவங்கள் இடம்பெற்றுள்ளதானால் குழந்தைகளுக்கும், தாய்மார்களுக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் அரச குடும்ப நல சுகாதார சேவை சங்கத்தின் தலைவர் தீபிகா கொடித்துவக்கு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.