வாகனங்கள் விலைகளை உயர்த்த வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
- Advertisement -
அதன்படி வாகன தயாரிப்புக்கு பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களின் விலை அதிகரித்ததன் காரணமாகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
- Advertisement -
தற்போது நாட்டில் இந்த ஆண்டில் வாகன விலையை உயர்த்துவது இது நான்காவது முறையாகும். இந்த தகவலினை மருத்தி சுசுக்கி மற்றும் மகேந்திரா ஆகிய இந்திய நிறுவனங்கள் இதனை உறுதிப்படுத்தியுள்ளன.
கார், மோட்டார் சைக்கிள், சிறிய ரக லொறிகள், பஸ் என பல்வேறு வாகனங்கள் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படுகின்றன. இதன்படி, இலங்கையிலும் வாகனங்களின் விலை எதிர்வரும் காலங்களில் மேலும் அதிகரிக்கும் என எதிர்வு கூறப்படுகின்றது.