கிளிநொச்சி – சம்புக்குளம் பகுதியில் நேற்று மாலை ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தொிவித்துள்ளனர்.
- Advertisement -
நண்பர்கள் இருவருக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில் அது வன்முறையானதில் தடியால் தாக்கப்பட்டு படுகாயமடைந்தார்.
- Advertisement -
இந் நிலையில் படுகாயமடைந்தவர் நோயாளர் காவுவண்டி மூலம் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனாவைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்தநிலையில் இன்றையதினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் இராமையா இராமஜெயம் எனும் ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இறந்தவரின் சடலம் பிரேதபரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான விசாரணைகளை தருமபுரம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.