அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவுடனான சந்திப்பு வெற்றியளிக்காத பட்சத்தில் அரசுக்குள் இருந்து சுயாதீன குழுவாக செயற்பட கட்சித்தலைவர்கள் சிலர் தீர்மானித்துள்ளதாக தெரியவருகின்றது. அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச நாடு திரும்பியதன் பின்னர், அவருடன் தீர்க்கமான பேச்சு நடத்துவதற்கு ஆளுங்கட்சியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.