குருநாகல் மாவட்டம், பிங்கிரிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கந்துருவெவ பகுதியில், வாவிக்குள் விழுந்து நபர் ஒருவர் மரணமடைந்துள்ளார் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த பகுதியினூடாக மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரே குறித்த வாவியில் விழுந்து உயிரிழந்துள்ளார்.
- Advertisement -
கந்துருவெவ பிரதேசத்தைச் சேர்ந்த நபரே இவ்வாறு மரணமடைந்துள்ளார். சடலம் குளியாப்பிட்டி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. பிங்கிரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.