இலங்கையில் சினோபாம் தடுப்பூசியின் 2 மருந்தளவை பெற்ற மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக காணப்படுகின்ற நபர்களுக்கு மூன்றாவது மருந்தளவை வழங்குமாறு இலங்கை மருத்துவ சங்கம் பரிந்துரை முன்வைத்துள்ளது.
- Advertisement -
இலங்கை மருத்துவ சங்கம் அறிக்கையொன்றின் ஊடாக கோரிக்கை விடுத்துள்ளது. அவ்வாறு மூன்றாவது தடுப்பூசி வழங்கப்படுமாயின், அஸ்ட்ரா சேனிகா, ஃபைசர் மறறும் மொடர்னோ ஆகிய தடுப்பூசிகளை செலுத்துமாறும் அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- Advertisement -
அத்துடன் 18 முதல் 60 வயதுக்கு இடைப்பட்டவர்களுக்கு (நாட்பட்ட நோய்களுக்கு உள்ளாகாத) சைனோ பாம் தடுப்பூசியின் இரண்டு மருந்தளவுகளை செலுத்துமாறு தாம் பரிந்துரை செய்வதாகவும் அந்த சங்கம் குறிப்பிடுகின்றது.
இதேவேளை, 12 – 18 வயதுக்கு இடைப்பட் சிறார்களுக்கு கொவிட் வைரஸ் தொற்று காரணமாக பாரிய பிரச்சினைகள் ஏற்படாது என்பதுடன், நோய்களுக்குள்ளான சிறார்களுக்கு வைரஸ் தாக்கத்தினால் கடுமையான நோய் அறிகுறிகள் ஏற்படுவதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் , குறித்த வயதெல்லையை கொண்ட சிறார்களுக்கு ஃபைசர் தடுப்பூசியை செலுத்துமாறும் இலங்கை மருத்துவ சங்கம் கோரியுள்ளது.