பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய பஹன்துடாவ சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டுவந்த புகைப்படம் போலியான கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணமாக குறித்த புகைப்படத்திலுள்ள தம்பதியினர் தாம் பெரும் அசௌகரியத்துக்கு உள்ளானதாக கவலை வெளியிட்டுள்ளனர்.
- Advertisement -
இந்நிலையில் மீண்டும் இதுபோன்றை செயலில் ஈடுபடவேண்டாம் என சமூகவலைத்தளத்தை உபயோகிப்பவர்களிடம் அவர்கள் கோரியுள்ளனர். இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில், “கடந்த 2020 ஆம் ஆண்டு எமது திருமணத்தின்போது, பஹன்துடாவ நீர்வீழ்ச்சிக்கு அருகில் புகைப்படம் எடுத்துக்கொண்டோம்.
- Advertisement -
அப்புகைப்படத்தை, ஆபாச சம்பவம் ஒன்றுடன் தொடர்புபடுத்தி சிலர் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்திருந்தனர். அத்துடன், எமது இன்ஸ்டாகிராம் கணக்குகள் தொடர்பான விபரங்களையும் இணையத்தளத்தில் வெளியிட்டு எம்மை பெரும் அசௌகரியத்துக்கு உள்ளாக்கிவருகின்றனர்.
இந்நிலையில் எமது புகைப்படம் சமூகவலைத்தளங்களில் பகிரப்படுவதை அறிந்து, அதனை பகிர்ந்தவர்களிடம் நாம் அவற்றை அகற்றுமாறு கோரினோம். சிலர் உதவிசெய்தனர். எனினும், மேலும் சிலர் தொடர்ந்தும் எம்மை அவமதிப்புக்கு உள்ளாக்கிவந்தனர்.
இதன் காரணமாக சமூகத்தில் எமக்கு பெரும் அவமானம் ஏற்பட்டுள்ளது. எனவே இனியொரு போதும் இவ்வாறான செயல்களில் ஈடுபடவேண்டாம் என அனைவரிடமும் கேட்டுக்கொள்கிறோம் எனவும் பாதிக்கப்பட்ட தம்பதிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.