கணினி வழியாக கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்த மாணவர் ஒருவர் இணையசூது விளையாட்டுகளுக்கு அடிமையான சம்பவம் அதிrச்சியினை ஏற்படுத்தி உள்ளது. இதற்காக மாணவன் ஒருவர் தனது வீட்டில் இருந்து இலட்சக்கணக்கான ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பவற்றினை இரகசியமாக விற்று பணம் பெற்றதாகவும் கூறப்படுகின்றது.
- Advertisement -
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் 18 வயதான குறித்த மாணவரை மாரவில பொலிசார் இன்று கைது செய்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், சந்தேக நபர் மாரவில கட்டுனேரிய பகுதியில் வசிக்கும் க.பொ.த உயர்தர மாணவர் என்றும், தாயும் தந்தையும் இத்தாலிக்கு வேலைக்கு சென்ற நிலையில் தாத்தா பாட்டிகளின் பராமரிப்பில் குறித்த மாணவன் வாழ்ந்து வருகிறார்.
- Advertisement -
க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவன், கணினி வழியாக கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்த நிலையில் இணைய வழி விளையாட்டுக்களிற்கு அடிமையாகி விட்டார். இதனையடுத்து மாணவனின் வீட்டில் இருந்த பல இலட்சம் ரூபாய் மதிப்புள்ள மோட்டார் சைக்கிள் திடீரென காணாமல் போயுள்ளது.
மோட்டார் சைக்கிள் வீட்டின் வாகன தரிப்பிடத்தில் இருந்த போது காணாமல் போனதால் மாணவனின் பாட்டி மற்றும் தாத்தா மாரவில பொலிசில் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து பொலிசார் மேற்கொண்ட விசாரணையில், இணைய விளையாட்டுகளுக்கு அடிமையாகிய மாணவனே அதனை விற்பனை செய்ததை கண்டறிந்தனர்.
கிட்டத்தட்ட 400,000 ரூபா பெறுமதியான மோட்டார் சைக்கிள்களை சுமார் 150,000 ரூபாவிற்கு விற்றதாக பொலிஸ் விசாரணையில் தெரிய வந்தது. அத்துடன் தனது தாய் மற்றும் பாட்டியிடம் இருந்து ரூ. 500,000 மதிப்புள்ள தங்க நகைகளை திருடி விற்பனை செய்ததையும் மாணவன் பொலிஸாரின் மேலதிக விசாரணைகளில் ஏற்றுக்கொண்டதாக கூறப்படுகின்றது.