இலங்கையில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இறுக்கமற்ற ஊரடங்கு நடைமுறையால் எதிர்வரும் வாரங்களில் நாளொன்றுக்கு 10 ஆயிரம் தொற்றாளர்கள் இனங்காணப்படுவார்கள் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு உறுப்பினர், மருததுவர் வாசன் ரட்ணசிங்கம் எச்சரித்துள்ளார்.
- Advertisement -
தற்போதைய நடைமுறைகளால் மாதம் ஒன்றுக்கு 10 ஆயிரம் மரணங்கள் ஏற்படக் கூடிய சாத்தியம் உள்ளது என்று கூறியுள்ள வாசன் ரட்ணசிங்கம், தெற்காசியாவில் இலங்கை மரண வீதத்தில் முன்னிலையில் உள்ளது என்று சுட்டிக்காட்டினார்.
- Advertisement -
இலங்கை எச்சரிக்கை நிலை 4 இல் பயணித்துக் கொண்டிருக்கின்றது. எச்சரிக்கை நிலை 4 என்பது முழு இலங்கையும் சிவப்பு வலயமாகியுள்ளது என்று கூறிய வாசன் ரட்ணசிங்கம், தொற்று சமூகப் பரவலை அடைந்திருக்கும் என்று கூறினார்.
எச்சரிக்கை நிலை 4 இல், அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட வேண்டும், ஆனால் இப்போது அத்தியாவசியத் தேவை என்ற பெயரில் அனைவரும் நடமாடிக் கொணடிருக்கிறார்கள் என்று கூறிய அவர், இந்த முடக்கத்தால் எந்தப் பயனும் கிடைக்காது என்று கூறினார்.