மொறட்டுவப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீட (Civil Engineering) இறுதியாண்டில் கல்வி பயின்ற மட்டக்களப்பு வெல்லாவெளியைச் சேர்ந்த செல்வி. நிஷாங்கனி- கௌரிகாந்தன் எனும் மாணவி 125 மாணவர்களுக்கிடையில் இறுதியாண்டுப் பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்று முதல் இடத்தைப் பெற்றுள்ளார்.
- Advertisement -
இலங்கையின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் மாணவர்கள் கல்வி பயிலும் இப் பல்கலைக்கழகத்தில் மட்டக்களப்பு மாணவி ஒருவர் முதல் இடத்தைப் பெற்று சாதனை படைத்திருப்பது இதுவே முதல் தடவையாகும். இவர் ஆரம்பக் கல்வியினை பட்டிருப்பு தேசிய பாடசாலையிலும், இடைநிலை உயர்தரக் கல்வியினை மட்/ வின்சன்ட் மகளிர் தேசிய கல்லூரியிலும் பயின்றவராவார். இவர் ஆசிரியர்களான கௌரிகாந்தன், சரஸ்வதிதேவி ஆகியோரின் புதல்வி ஆவார்.