சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுதியில் மொத்தம் 639 நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
- Advertisement -
குறித்த குற்றச்சாட்டுக்காக கடந்த ஒக்டோபர் 30 முதல் இதுவரையான காலப் பகுதியில் மொத்தம் 57,435 நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
- Advertisement -
மேல் மாகாணத்தை விட்டு வெளியேற முயன்ற 618 வாகனங்களில் பயணித்த 1,017 நபர்களும், உள் நுழைய முயன்ற 751 வாகனங்களில் பயணித்த 1,267 நபர்களும் நேற்று தனிமைப்படுத்தல் விதிமுறைகளின் கீழ் 13 வெளியேறும் மற்றும் உள் நுழையும் சோதனைச் சாவடிகளில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.