கொவிட்-19 உயிரிழப்புகள் குறித்து போலியான செய்திகளை சமூக ஊடகங்களில் பரப்பி, மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டுக்காக ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைதுசெய்யப்பட்ட நபர் 36 வயதுடைய நுகேகொடை பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.
- Advertisement -
கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்தவர்களின் சடலங்கள் களுபோவில போதனா வைத்தியசாலையின் வார்டுகளில் குவிந்து கிடப்பதாக தெரிவித்து, பிற நாடுகளில் நாடுகளில் நிகழ்ந்த கொவிட் உயிரிழப்பு தொடர்பான புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பதவேற்றம் செய்தமைக்காகவே அவர் கைதுசெய்யப்பட்டார்.
- Advertisement -
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கொழும்பு நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், ஒரு இலட்சம் ரூபா சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அத்துடன் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 16 ஆம் திகதி நீதிமன்றில் மீண்டும் ஆஜராகுமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.