நாட்டில் தற்போது அமுலில் ஊரடங்கு சட்டம் மேலும் ஒரு வாரத்திற்கோ அல்லது சில வாரங்களுக்கோ நீடிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக சுகாதார தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. நாட்டில் கோவிட் தொற்றாளர் எண்ணிக்கை அதிகரித்து செல்லும் நிலையில் எதிர்வரும் இரு வாரங்கள் நாட்டுக்கு தீர்மானமிக்கவை என சுகாதார தரப்பினர் கூறும் நிலையிலேயே இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
- Advertisement -
எவ்வாறாயினும் இந்த வாரத்தில் கோவிட் தொற்றுப் பரவல் நிலைமைகளை ஆராய்ந்து எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஊரடங்கை நீடிப்பதா இல்லையா என்பது குறித்து கோவிட் தடுப்பு செயலணி தீர்மானம் எடுக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.