கொழும்பில் இன்று முதல் மக்களுக்கு 2000 ரூபா நிவாரண பணம் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை கொழும்பு மாவட்ட செயலாளர் பிரதீப் ஜசரட்ன தெரிவித்துள்ளார். அத்துடன், தனிமைப்படுத்தல் ஊடரங்கு காலத்தில் வாழ்வாதாரத்தை இழந்த கொழும்பு மாவட்ட மக்களுக்கு 2000 ரூபா கொடுப்பனவை வழங்கும் பணி இன்று முதல் ஆரம்பிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
- Advertisement -
இதுவரை, இரண்டு இலட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொழும்பு மாவட்டத்தில் 2000 ரூபா கொடுப்பனவு பெறுவதற்கு தகுதி பெற்றுள்ளனர். மேலும், கிராம உத்தியோகத்தர், சமுர்த்தி உத்தியோகத்தர் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஊடாக இந்த கொடுப்பனவு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.