அரசினால் வழங்கப்பட உள்ள ரூபா 2,000 இற்கான நிதி ஒதுக்கீடு கிடைக்கப்பெற்றுள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார். தற்போது நாடளாவிய ரீதியாக அமுலில் உள்ள பொது முடக்க காலத்தில் அரசினால் அறிவிக்கப்பட்டுள்ள அரச உதவி எதுவும் பெறாத வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கென இந்த நிதி ஒதுக்கப்ட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
- Advertisement -
இது தொடர்பாக பிரதேச செயலாளர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு ரூபா 2000 நிவாரண உதவி விரைவாக வழங்கப்படுவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.