இலங்கை மக்கள் பாவிக்கும் அத்தியாவசிய மருந்துகளின் விலையை கிட்டத்தட்ட 10 சதவிகிதம் அதிகரிக்க முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.உயர் இரத்த அழுத்தம் மற்றும் பிற தொற்று அல்லாத நோய்களுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் 60 வகையான அத்தியாவசிய மருந்துகளின் விலையை அதிகரிக்க மருந்தகங்களுக்கு அரசாங்கம் அனுமதித்துள்ளது. இதற்கான வர்த்தமானி வெளியிடப்படவுள்ளது.