இன்று இரவு பத்து மணி முதல் நாடளாவிய ரீதியிலான முடக்கம் இலங்கையில் அமுலாவதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல அறிவித்துள்ளார். அத்துடன், குறித்த முடக்கமானது எதிர்வரும் 30ஆம் திகதி வரையில் அமுலில் இருக்கும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
- Advertisement -
இது தொடர்பில் சற்று முன் சுகாதார அமைச்சர் தனது டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளதுடன், நாட்டிலுள்ள மக்கள் அனைவரையும் சட்டத்தை கடைப்பிடிக்குமாறும், வீட்டிலேயே இருக்குமாறும் வலியுறுத்தியுள்ளார். மகாசங்கத்தினரின் கோரிக்கையை ஜனாதிபதி ஏற்றிக் கொண்டுள்ளதாக ஔடத உற்பத்திகள், வழங்குகைகள் மற்றும் ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
- Advertisement -
அத்துடன், நாடு முடக்கப்படுவது தொடர்பில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, அத்தியாவசிய தேவைகள் தவிர்ந்த நாட்டில் ஏனைய அனைத்து விடயங்களும் முடக்கப்படும் என மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.
குறித்த முடக்கமானது எப்போது வரையில் அமுலில் இருக்கும் என்பது தொடர்பில் இன்று இரவு தீர்மானம் எட்டப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் நிலவும் கோவிட் தொற்று நிலைமை தொடர்பிலான கூட்டமொன்று ஜனாதிபதி தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றிருந்தது.
குறித்த கூட்டம் முடிந்த பின் அங்கிருந்து வெளியேறும் போது ஊடவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன மற்றும் அமைச்சர் காமினி லொக்குகே ஆகியோர் தெரிவித்துள்ளனர்.