தற்போது மாகாணங்களுக்கிடையில் பயணத்தடையை விதித்துள்ள அரசாங்கம் இரவு நேர ஊரடங்குச் சட்டத்தையும் அமுல்படுத்த ஆராய்ந்து வருகின்றது. இதன்படி இரவு 11 மணிமுதல் அதிகாலை 4 மணிவரை ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துவதற்கும்,
- Advertisement -
அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் அந்த காலப்பகுதியில் விலக்களிக்கவும் அரச மேல் மட்டத்தில் ஆராயப்பட்டு வருகின்றது. மேலும், நாளைய தினம் வெளியிடப்படவுள்ள விசேட வர்த்தமானியில் இது தொடர்பில் மேலும் பல விடயங்கள் உள்ளடக்கப்படவுள்ளன.