யாழ்.கோப்பாய் சந்திக்கு அண்மையாக இன்று காலை மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த தம்பதியினரை பின்னால் வந்த டிப்பர் வாகனம் மோதியதில், இளம் பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதன்போது மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகின்றது.
- Advertisement -
சம்பவத்தில் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். பின்னால் வந்த டிப்பர் வாகனம் அவர்களை மோதித்தள்ளியது. இதில் 34 வயதான பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.