கொரோனா தொற்றினைக் கட்டுப்படுத்த புதியதொரு வர்த்தமானி அறிவிப்பை வெளியிட சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தயாராகி வருகின்றதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் சுகாதார நெறிமுறைகள் அடங்கிய குறித்த புதிய வர்த்தமானி அறிவித்தல் நாளை மறுநாள் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
- Advertisement -
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்படும் வழிகாட்டல்கள் சிலவற்றை சட்டமாக்குவதற்கான வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
- Advertisement -
அதற்கமைய, எதிர்வரும் திங்களன்று குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல், நாடளாவிய ரீதியில் கொரோனா நோயாளர்களுக்கு வீட்டிலேயே சிகிச்சை வழங்கும் வேலைத்திட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும், அதற்கான பயிற்சிகளை வைத்தியர்கள் தற்போது நிறைவு செய்துள்ளதாகவும் சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.