செஞ்சோலை படுகொலையின் 15ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினார்.
- Advertisement -
வல்வெட்டித்துறையில் உள்ள தனது அலுவலகத்தின் முன்பாக இன்றைய தினம் காலை சுடரேற்றி , மலர் தூபி அஞ்சலி செலுத்தினார். குறித்த அஞ்சலிக்கு பொலிஸார், இராணுவத்தினர் தடைகளை ஏற்படுத்திய போதிலும் , அவற்றினையும் மீறி படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.
- Advertisement -
புதுக்குடியிருப்பு பகுதியிலிருந்த செஞ்சோலை சிறுவர் பராமரிப்பு இல்லத்தின் மீது கடந்த 2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் திகதி ஸ்ரீலங்கா விமான படையினர் மேற்கொண்ட குண்டு வீச்சில் 53 மாணவிகளும் 7 பணியாளர்களும் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.