ஶ்ரீ ஜயவர்தனபுர கோட்டை மாநகர சபை மேயர் I.M.V. பிரேமலாலை தாக்கிய சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் (04) புறக்கோட்டை சந்தியில் இடம்பெற்ற மோதலில் காயமடைந்த ஶ்ரீ ஜயவர்தனபுர கோட்டை மாநகர சபை மேயர் தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
- Advertisement -
இந்நிலையில் அவரை தாக்கிய சந்தேக நபர்கள் கைதான நிலையில் எதிர்வரும் 9 ஆம் திகதி வரை அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.