அரச ஊழியர்கள் தொடர்பில் பொதுச்சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிறியால் ஒரு புதிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி பொதுச்சேவையிலுள்ள கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் ஒரு வயக்குட்பட்ட குழந்தை களுள்ள தாய்மார்கள் வீட்டிலிருந்து பணியாற்ற அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.