கொரியாவில் வேலைவாய்ப்பைப் பெற்றுத் தருவதாகக் கூறி 31 இலட்சம் ரூபா பண மோசடியில் ஈடுபட்ட சந்தேகத்தில் இருவர் கண்டி விசேட குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இத்தகவலை பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
- Advertisement -
குறித்த சந்தேக நபர்கள் தமது வசிப்பிடங்களாக பேராதனை, ஜா -எல, நீர்கொழும்பு மற்றும் முருத்தலாவ என வெவ்வேறு முகவரிகளை வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். சம்பவம் தொடர்பில் 55 மற்றும் 26 வயதுடைய நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
- Advertisement -
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கண்டி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் ஆகஸ்ட் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், மேலதிக விசாரணைகளை கண்டி விசேட குற்ற விசாரணைப் பிரிவினர் முன்னெடுத்துவருவதாகவும் பிரதி பொலிஸ்மா அதிபர் கூறினார்.