அதிக ஆபத்தாக சூழ்நிலையை கருத்தில் கொண்டு, சமூகத்தில் சுகாதார நடவடிக்கைகளை கடைப்பிடிக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மீறினால் எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கை எடுக்க பொலிஸ் அல்லது பிற பாதுகாப்பு படைகள் களமிறக்கப்படுவார்கள் எனவும் பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார்.
- Advertisement -
கோவிட் -19 நோயாளிகள் தினமும் அதிகரித்து வருகின்றனர், மேலும் நோய்த்தொற்றுகளின் அறிகுறிகளைக் காண்பிக்கும் போக்கும் அதிகரித்துள்ளது. மேலும், சிகிச்சை மையங்களில் இடப்பற்றாக்குறை இருப்பதாகவும், ஒக்சிசனின் தேவை அதிகரித்துள்ளதாகவும் நிபுணர்கள் எச்சரிக்கின்றதை உபுல் ரோஹண சுட்டிக்காட்டினார்.