தான்தோன்றித்தனமாக செயற்படும் அரசாங்கத்தை ஆட்டம் காணச்செய்யும் வகையில் களமிறங்கியுள்ளது எதிரணி. இதன்படி எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து அரசுக்கு எதிரான போராட்டம் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
- Advertisement -
நியாயமான சமூகத்திற்கான தேசிய இயக்கத்தின் தலைவர், முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.
- Advertisement -
இந்த சந்திப்பில் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, ஐக்கிய மக்கள் சக்தியின் பங்காளி கட்சிகளைச் சேர்ந்நத மனோகணேசன், திகாம்பரம்,ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித்தலைவர் ருவான் விஜேவர்தன,இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, பேச்சாளர் சுமந்திரன் உட்பட அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இந்த சந்திப்பில் கலந்துக்கொண்டுள்ளனர்.
நாடு இருள் சூழ்ந்த யுகத்தை நோக்கி நகர்வதாகவும், மீள நாட்டில் வெளிச்சம் உண்டாவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனவும் சஜித் பிரேமதாஸ கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், எதிர்காலத்தில் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவது குறித்து இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்படுவது தொடர்பிலும் தற்போது கவனம் செலுத்தப்பட்டு வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியிலுள்ள பங்காளி கட்சிகளுடன் கூட்டணி ஒன்றை அமைத்து, அதனுடன் ஐக்கிய தேசியக் கட்சியை இணைப்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
மேலும், ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஏனைய கட்சிகள் இணைந்து செயற்படுவது குறித்தும் தற்போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.