தனது மகளின் கற்றல் செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், சத்தமாக பக்திப் பாடல் பாடிய அயலவரை, கூரிய ஆயுதத்தால் தாக்கிக்கொலை செய்த நபர் ஒருவருக்கு அளிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை கேரள உயர் நீதிமன்றம் மீண்டும் உறுதிசெய்யப்பட்டுள்ளது.
- Advertisement -
சம்பவ தினமான 2011 மார்ச் 19 ஆம் திகதியன்று சசிதரன் பிள்ளை (கொல்லப்பட்டவர்) என்பவர் தனது வீட்டில் பக்திப் பாடல்களை சத்தமாகப் பாடிக்கொண்டிருந்தபோது, அவ்விடத்துக்கு வந்த அயல்வீட்டுக்காரர், தனது மகளின் கற்றல் நடவடிக்கைக்கு இந்தப் பாடல் இடையூறு விளைவிப்பதாகக் தெரிவித்து வாக்குவாதம் செய்துள்ளார்.
- Advertisement -
அதன்போது, வாக்குவாதம் முற்றியதில், சசிதரன் பிள்ளையை, கூரிய ஆயுதத்தால் மூன்று தடவைகள் தாக்கி அயல்வீட்டு நபர் கொலை செய்துள்ளார். இதன்போது, மேலும் இருவர் உடன் இருந்துள்ளனர்.
இந்நிலையில், சம்பவம் தொடர்பில் மேற்படி மூவரும் கைதுசெய்யப்பட்டனர். கொலை தொடர்பான வழக்கு விசாரணைகள் இடம்பெற்றுவந்த நிலையில், சந்தேகநபர்களில் ஒருவர் உயிரிழந்தார்.
பின்னர் ஏனைய சந்தேகநபர்களுக்கு எதிரான விசாரணைகளையடுத்து. நீதிபதிகள் ஆயத்தினால் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. பின்னர், இந்த தீர்ப்புக்கு எதிராக கேரள உயர்நீதிமன்றில் மேன்முறையீடு செய்யப்பட்டது. இதன்போது, பிரதான குற்றவாளிக்கு எதிரான தீர்ப்பு உறுதிசெய்யப்பட்டது.
எனினும், மற்றைய நபர், கொலை செய்வதனை முதன்மையான நோக்கமாக கொண்டிருக்கவில்லை என்றும் பொதுவான கருத்தொன்றை மாத்திரமே சம்பவ இடத்தில் பகிர்ந்துகொண்டதாகவும் சாட்சிய விசாரணைகளில் தெரியவந்ததையடுத்து, அவர் நிரபராதியெனக் கருதி விடுவிக்கப்பட்டார்.