யாழ்ப்பாணம் − பருத்தித்துறை உள்ளிட்ட சில பகுதிகள் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் முடக்கப்பட்டுள்ளன. பருத்தித்துறை உள்ளிட்ட மேலும் சில பகுதிகளில் இன்று 35 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
- Advertisement -

இதை அடுத்து, இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது. மருந்தகங்கள் உட்பட வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்படவேண்டும் என்று சுகாதாரத் துறையினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.
- Advertisement -
வங்கிகள் அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் திறக்க முடியும். பருத்தித்துறை நகரில் இருந்த பேருந்து தரப்பிடம் மூடப்பட்டுள்ளதால் டிப்போ சந்தியிலிருந்து பேருந்துகள் சேவையில் ஈடுபடும்.

பருத்தித்துறை சந்தை வியாபாரிகள் மூவருக்கு தொற்று உள்ளமை இன்று அன்டிஜன் பரிசோதனையில் தெரியவந்தது. அதனையடுத்து சந்தை முடக்கப்பட்டது. பருத்தித்துறை பெருநகர், 401 கிராம அலுவலகர் பகுதிகளில் கட்டுப்பாடுகள் போடப்பட்டுள்ளன.

பருத்தித்துறை 3ஆம் குறுக்குத் தெரு, தும்பளை வீதி, பத்திரகாளி வீதி, வீ எம் வீதி, கடற்கரை வீதி, கொட்டடி வீதி அனைத்திலிருந்து நகருக்குள் உள் நுழைய முடியாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.