கப்பம் கோருவோர், போதைப்பொருள் வர்த்தகர்கள், சிறுவர் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறையில் ஈடுபடுவோரை தேடிச் சென்று கைது செய்வதற்கான பிரிவொன்றை ஸ்தாபிக்க காவல்துறை திணைக்களம் தீர்மானித்துள்ளது.
- Advertisement -
காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன இதனை தெரிவித்துள்ளார். நாட்டின் தென்பகுதியை மையப்படுத்தி போதைப்பொருள் வர்த்தக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
- Advertisement -
இந்நிலையில் அவர்களை கைது செய்வதற்காக குறித்த காவல்துறை பிரிவு ஸ்தாபிக்கப்படவுள்ளது. விரைவில் ஸ்தாபிக்கப்படவுள்ள குறித்த காவல்துறை பிரிவிற்காக தொலைபேசி இலக்கம் ஒன்றும் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.