கோட்டாபய – மஹிந்த தலைமையிலான அரசாங்கத்தின் கீழ் நாட்டின் கடன்தொகை 03 ஆயிரம் பில்லியன் அதிகமான ரூபாவால் அதிகரித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
- Advertisement -
அதன் பிரகாரம் இலங்கையில் உள்ள குடும்பமொன்றின் கடன்சுமையானது 06 இலட்சத்து 4 ஆயிரத்து 440 ரூபாவாக உயர்வடைந்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா குற்றஞ்சாட்டியுள்ளார்.
- Advertisement -
இலங்கையில் நிறுவப்பட்ட நல்லாட்சி அரசாங்கத்தின் முழுமையான ஆட்சிக்காலத்தில் கடன் தொகையானது 5 ஆயிரத்து 545 பில்லியன் ரூபாவினால் அதிகரித்திருந்ததாக ஹர்ஷ டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.
எனினும் கோட்டாபய – மஹிந்த அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்து முதல் 15 மாதங்களில் கடன்தொகையானது 03 ஆயிரத்து 22 பில்லியனால் உயர்வடைந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இந்தக் காலப்பகுதியில் நாட்டின் நிதி ஆலோசகராக பஸில் ராஜபக்ஸவே செயற்பட்டிருந்தார் என ஹர்ச டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.
அந்த வகையில் மார்ச் மாதம் 31 ஆம் திகதி வரையான காலப் பகுதி வரை நாட்டின் மொத்த கடன் பெறுமதி 16 ஆயிரத்து 53 பில்லியன் ரூபாவாக உயர்வடைந்துள்ளதாக ஹர்ஷ டி சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.