சமூக ஊடகங்களில் கூறப்பட்டபடி கையடக்க தொலைபேசிகள், தொலைக்காட்சிகள், குளிர்சாதன பெட்டிகள், பல மின்னணு பொருட்கள், போன்றவற்றை இறக்குமதி செய்ய தடை விதிக்கப்படவில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. நிதி அமைச்சின் செயலாளர் இதனை அறிவித்துள்ளார்.
- Advertisement -
நாட்டில் டொலரின் கையிருப்பு குறைந்துள்ள நிலையில் இறக்குமதிகளை நிறுத்தும் திட்டத்தின் கீழ் குறித்த பொருட்களின் இறக்குமதியும் தடை செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இதனையே இலங்கையின் நிதி அமைச்சு மறுத்துள்ளது.