அனைத்து இராணுவ மருத்துவமனைகளிலும் இன்று (5) மக்களுக்கு தடுப்பூசி போடப்படும் என கொரோனா பரவுவதை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும் இராணுவ தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா கூறினார்.
- Advertisement -
அதன்படி, மேல் மாகாணத்தின் நாரஹென்பிட்டி, வேரஹெர, பனாகொட விமான நிலையம் மற்றும் வெலிசறை இராணுவ மருத்துவமனைகளில் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இன்று காலை 8:30 மணி முதல் மாலை 4.30 மணி வரை தடுப்பூசி வழங்கப்படும் என்று இராணுவ தளபதி தெரிவித்தார்.
- Advertisement -
மேலும், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, தியதலாவ, அனுராதபுரம், காட்டுநாயக்க, காலி கோட்டை மற்றும் மாத்தரை நில்வல இராணுவ முகாம்களில் இன்று 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த இடங்களுக்கு யார் வேண்டுமானாலும் வந்து தடுப்பூசி போடலாம் என்றும் சவேந்திர சில்வா தெரிவித்தார்.