மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவின் ஐயன்கேணி கிராமத்திலுள்ள வீடொன்றிலிருந்து முதியவரான ஆணொருவரின் சடலத்தைத் மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
- Advertisement -
இவ்வாறு இன்று (29) மீட்கப்பட்ட சடலம், ஐயன்கேணி கிராமம் கிருஷ்ணன் கோயில் வீதியை அண்டி வசித்து வந்த காளிக்குட்டி நாகராசா (வயது 60) என்பவருடையது என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
- Advertisement -
இவர் மனைவியுடன் வசித்து வந்த நிலையில், குறித்த முதியவர் அவரது வீட்டில் இறந்துகிடந்துள்ளார்.
பொலிஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து ஸ்தலத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர். இறந்தவருக்கு கோவிட் தொற்று ஏற்பட்டிருக்கவில்லை எனப் பரிசோதனையின் போது தெரியவந்துள்ளாக பொலிஸ் வாக்குமூலத்தில் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
கூலித்தொழில் செய்து சீவியம் நடத்திய இவருக்கு நீண்ட நாட்பட்ட ஆறாத காயம் இருந்தது என உறவினர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.