இலங்கையில் எதிர்வரும் நாட்களில் சமூகத்தில் பாரியளவிலான கொவிட் தொற்றார்கள் அடையாளம் காணப்படுவார்கள் என சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.
- Advertisement -
சுகாதார அமைச்சின் செயலாளர் மற்றும் சுகாதார பணிப்பாளரினால் கொவிட் தொடர்பில் அண்மையில் வெளியிடப்பட்ட இரண்டு சுற்றரிக்கைகள் காரணமாக இந்த நிலைமை ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
- Advertisement -
இந்த சுற்றரிக்கைகள் மூலம் வீடுகளில் உயிரிழக்கும் நபர்களின் சடலங்களை விடுவிக்கும் அதிகாரம், திடீர் மரண பரிசோதகர் மற்றும் கிராமசேவகருக்கு வழங்கப்பட்டுள்ளமையும் இந்த நிலைமைக்கு ஒரு காரணமாகும்.
உயிரிழக்கும் நபர்களின் உறவினர்களுக்கு PCR பரிசோதனை மேற்கொள்ளும் முறை மற்றும் பிரதேச சுகாதார பரிசோதகர்களின் அனுமதியின்றி சடலத்தை விடுவிக்கவும் அவசியமில்லை என அதில் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறான காரணங்களினால் PCR பரிசோதனைகள் பாரிய அளவு குறைவடையும். இதனால் தொற்றாளர்களின் எண்ணியும் குறைவாக காணப்படும்.
இவ்வாறான விடயங்கள் காரணமாக எதிர்வரும் 2 மாதங்களுக்கு கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை தரவு வீழ்ச்சியடையும். எனினும் மூன்றாவது மாதத்தில் அதாவது செப்டெம்பரில் எதிர்பாராத அளவு கொவிட் தொற்றார்கள் அதிகரிப்பார்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.