நாட்டில் நேற்று கொவிட்-19 தொற்று உறுதியான 1,825 பேரில் அதிகளவானோர் கம்பஹா மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர். கொவிட்-19 பரவல் கட்டுப்பாட்டு தேசிய செயற்பாட்டு மையத்தின் அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி நேற்று(26) கம்பஹா மாவட்டத்தில் 407 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது.
- Advertisement -
கொழும்பு மாவட்டத்தில் 346 பேருக்கும், கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் 106 பேருக்கும் கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது. அத்துடன் களுத்துறையில் 183 பேருக்கும், மட்டக்களப்பில் 113 பேருக்கும் பதுளையில் 107 பேருக்கும் தொற்றுறுதியாகியுள்ளது.
- Advertisement -
கண்டி மாவட்டத்தில்; 106 பேருக்கும், காலி மாவட்டத்தில் 105 பேருக்கும், கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.
இரத்தினபுரியில் 75 பேருக்கும், கேகாலை, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் தலா 44 பேருக்கும், யாழ்ப்பாணத்தில் 43 பேருக்கும் குருநாகல் மற்றும் மாத்தளை மாவட்டங்களில் தலா 29 பேருக்கும் கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது.
ஹம்பாந்தோட்டையில் 28 பேருக்கும் அனுராதபுரத்தில் 26 பேருக்கும் முல்லைத்தீவில் 20 பேருக்கும் கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளதாக கொவிட்-19 பரவல் கட்டுப்பாட்டு தேசிய செயற்பாட்டு மையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.