இன்று வெள்ளிக்கிழமை காலை ராகலை நகரில், உரத்தைப் பதுக்கி வைத்து, அதை கூடுதலான விலைக்கு விற்பனை செய்துவந்த டெல்மார் பகுதியை சேர்ந்த, வர்த்தகர் ஒருவரை இராகலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
- Advertisement -
குறித்த வர்த்தகர் தனது வீட்டிலும்,கடையிலும் மற்றும் அவருடைய களஞ்சியசாலையிலும் இரசாயன உரவகைகளை பதுக்கி வைத்திருந்ததுடன் 1,300 ரூபாய்க்கு விற்பனை செய்யவேண்டிய 50 கிலோ கிராம் எடை கொண்ட உர மூட்டைகளை 5,000 ரூபாய் தொடக்கம் 6,000 ரூபாய் வரை விற்பனை செய்துவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Advertisement -
இந்நிலையில் அப்பகுதியிலுள்ள விவசாயிகள் குறித்த நபரின் வீட்டை முற்றுகையிற்று, அங்கிருந்த ஒரு தொகை உரத்தை கைப்பற்றியுள்ளனர். அத்துடன், அவரின் கடையை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் நகரில் சுமார் மூன்று மணிநேரம் அமைதியின்மை ஏற்பட்டது.
இந்த நிலையில், இராகலை பொலிசார் நிலைமையை கட்டுப்பாட்டுக்கு கொண்டுவந்ததையடுத்து குறித்த வர்த்தகரை கைது செய்து விசாரணைக்காக அழைத்து சென்றனர்.
மேலும் கடந்த ஒருமாதத்துக்கு முன், இந்த வர்த்தகர் பதுக்கி வைத்திருந்த ஆயிரக்கணக்கான உரமூட்டைகள் நுகர்வோர் அதிகார சபையினரால் பறிமுதல் செய்யப்பட்டு, அது விவசாயிகளுக்கு 1,5000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.