மட்டக்களப்பு – செங்கலடி கறுத்தப்பாலத்தில் இராணுவ வாகனம் வீதியை விட்டு விலகி நீரோடை ஒன்றுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
- Advertisement -
இதில் 2 இராணுவத்தினர் உயிரிழந்ததுடன் 4 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
- Advertisement -
கரடியனாறில் இருந்து செங்கலடி பகுதியை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த இராணுவ வாகனம் கறுப்பு பாலம் அருகில் கட்டுப்பாட்டை மீறி பாலத்திற்கு கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.
இதில் சென்ற இரு இராணுவத்தினர் உயிரிழந்ததுடன் 4 பேர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதேவேளை நீரோடையில் விபத்துக்குள்ளான இராணுவ வண்டியை கரைசேர்க்கும் நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபட்டுவருவதுடன் ஒருவரின் சடலத்தையும் தேடி வருகின்றனர்.