நிர்மாணப் பணியில் உள்ள மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் மோட்டார் வாகனம் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் ஒன்றுடன் ஒன்று மோதி இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
- Advertisement -
நாரம்மல, எபலவத்த பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்தாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த விபத்தில் மோட்டார் சைக்களில் பயணித்த இருவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
- Advertisement -
விபத்தின் பின்னர் குறித்த இரண்டு வாகனங்களும் தீப்பற்றி எரிவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்து குறித்து இருவர் கைது செய்யப்பட்டுள்ள பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.