நாட்டில் கோவிட் தொற்று அச்சுறுத்தல் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருக்கின்ற பாடசாலைகள் தற்போதைய நிலைமையில் திறக்க முடியாது என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
- Advertisement -
அவ்வாறு பாடசாலைகளைத் திறந்தால் மாணவர்களின் உயிருக்கே அச்சுறுத்தல் ஏற்படலாம் என்ரும் அவர் குறிப்பிட்டார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றியபோது கல்வி அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
- Advertisement -
அத்துடன் மருத்துவத்துறை விசேட நிபுணர்களின் ஆலோசனைப்படி பாடசாலைகளை மீளத்திறப்பதற்குரிய திகதி தீர்மானிக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.