கொவிட் தொற்றினால் பெருந்தோட்ட மக்கள் பல நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ள நிலையில், அப்பகுதிகளில் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் மற்றும் 5,000 ரூபா நிவாரண கொடுப்பனவு வழங்கும் வேலைத்திட்டம் என்பன முறையாக முன்னெடுக்கப்படவில்லை.
- Advertisement -
இந்நிலையில் தேயிலை தோட்டங்களிலும் சீனர்களை பணிக்கு அமர்த்துவதற்காகவா அரசாங்கம் இவ்வாறு செயற்பட்டுக் கொண்டிருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் கேள்வியெழுப்பினார்.
- Advertisement -
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.