மக்கள் சார்பு ஆட்சியை ஏற்படுத்த போவதாக வாக்குறுதியளித்து ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கம் தனிமைப்படுத்தல் சட்டத்தை கூட மக்களை ஒடுக்குவதற்காக பயன்படுத்தி வருகிறது என முன்னிலை சோசலிசக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
- Advertisement -
அரசியல்வாதிகளின் மங்கள நிகழ்ச்சிகள், அவமங்கள நிகழ்ச்சிகள், அரசியல் கூட்டங்கள், பொருட்களை விநியோகிக்கும் நடவடிக்கைகளுக்கு பொருந்தாதக தனிமைப்படுத்தல் மற்றும் பயணக் கட்டுப்பாட்டுச் சட்டங்கள் மக்களை அடக்கி ஒடுக்குவதற்கு மாத்திரம் பயன்படுத்தப்படுகிறது எனவும் அந்த கட்சி குறிப்பிட்டுள்ளது.
- Advertisement -
கொழும்பு முகத்துவாரம் பிரதேசத்தில் மீனவர்கள் ஏற்பாடு செய்த ஆர்ப்பாட்டத்தை, அதிகளவிலான பொலிஸார் அழைக்கப்பட்டு அடக்க முயற்சிக்கப்பட்டதாக முன்னிலை சோசலிசக் கட்சியின் பிரசார செயலாளர் புபுது ஜாகொட தெரிவித்துள்ளார்.
பயணக்கட்டுப்பாட்டுகள் விதிக்கப்பட்டுள்ளதால், தொழிலாளர்களே அநீதியை எதிர்நோக்கியுள்ளனர்.
அந்த அநீதிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தும் உரிமை கூட தொழிலாளர்களுக்கு இல்லாமல் போயுள்ளது எனவும் ஜாகொட குறிப்பிட்டுள்ளார்.