பயணக் கட்டுப்பாடு நீக்கப்படுகின்ற நிலையில் சகல பொருளாதார மத்திய நிலையங்களும் நாளை (21) முதல் திறக்கப்படவுள்ளன.
- Advertisement -
எனினும், சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய பொருளாதார மத்திய நிலையங்களின் நடவடிக்கைகளை முன்னெடுப்பது அவசியம் என கொரோனா தொற்றுப் பரவலை தடுக்கும் தேசிய செயலணி தெரிவித்துள்ளது.
- Advertisement -
அதற்கமைய, நுவரெலியா, தம்புளை, கெப்பட்டிபொல, தம்புத்தேகம, நாரஹென்பிட்டி, மீகொட, பிலியந்தலை, இரத்மலானை, வேயங்கொட, வெலிசறை மற்றும் நாவலப்பிட்டி ஆகிய பொருளாதார மத்திய நிலையங்கள் திறக்கப்படவுள்ளன.
சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய வர்த்தக நடவடிக்கைளும் இடம்பெறவுள்ளன.