இலங்கையில் பல திட்டங்களில் சீனா பங்கேற்றிருப்பது இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என இந்திய கடற்படையின் துணைத் தலைவர் அசோக் குமார் தெரிவித்துள்ளார்.ஹைதராபாத்தில் செய்தியாளர்களை சந்தித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
- Advertisement -
சீனாவின் இந்த திட்டங்கள் குறித்து மிகவும் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும் இந்திய கடல் எல்லைகள் மிகவும் தீவிரமாக கண்காணிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
- Advertisement -
சீனாவுடன் பதற்றம் நிலவுவதால் அமெரிக்காவின் பிரிடேட்டர் வகை ஆளில்லா உளவு விமானங்களை பயன்படுத்தி வருவதாகவும் கண்களில் இருந்து யாரும் தப்ப முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.