பாடசாலைகள் மீளத் திறக்கப்பட முன்னர் அனைத்து பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் தடுப்பூசி வழங்க கல்வி அமைச்சு எதிர்பார்த்துள்ளது.
- Advertisement -
இதன்படி மாணவர்களுக்கு அமெரிக்காவின் பைசர் தடுப்பூசியை அளிக்க உத்தேசிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
- Advertisement -
இதுகுறித்து சுகாதார அமைச்சு மற்றும் உயரதிகாரிகளிடம் கல்வி அமைச்சு கோரிக்கை விடுத்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் இறுதிமுடிவு இன்னும் எடுக்கப்படவில்லை எனவும் கூறப்படுகின்றது.
இதேவேளை வருகின்ற ஜுலை மாதத்தில்தான் பைசர் தடுப்பூசியின் ஒருதொகை இலங்கைக்கு கிடைக்கும் என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.