யாழ் மாவட்டம் சங்கானை நகரில் சமூக இடைவெளிகளை மறந்து சந்தைகளிலும் வர்த்தக நிறுவனங்களிலும் அதிக மக்கள் ஒன்று கூடியிருந்தனர்.
- Advertisement -
கண்காணிப்பு நடவடிக்கைகளிற்காக பொலிசார் காலையில் கடமையில் ஈடுபடவில்லை. இதனால் மரக்கறிச்சந்தை , பழம் விற்பனைசெய்யும் பகுதிகளில் அதிகளவான மக்கள் சமூம இடைவெளியின்றி ஒன்றுகூடினர்.
- Advertisement -
எனினும் பிற்பகல் 11 மணியிலிருந்து இராணுவத்தின் பிரசன்னத்துடன் மக்கள் ஒழுங்குபடுத்தப்பட்டு வருகின்றனர். மாவட்டத்தின் ஏனைய இடங்களில் சுகாதார வழிகாட்டலிற்கு அமைவாக அத்தியாவசிய கடைகள் மட்டும் திறக்கப்பட்டுள்ளன.
இதற்கான அறிவித்தலை ஒலிபெருக்கி மூலம் பொலிசார் அறிவித்து வந்தனர். இருந்த போதும் சங்கானை நகரில் அவை மீறப்பட்டு புடைவை விற்பனை நிலையங்கள் ,அழகுசாதன பொருள் விற்பனை, தொலைபேசி விற்பனை நிலையங்கள் இரும்புக்கடைகள் யாவும் திறக்கப்பட்டு விற்பனை நடைபெற்றுவருகின்றது.
இதன்காரணமாக சங்கானை நகரில் இன்று அதிகளவான மக்கள் ஒன்றுகூடியுள்ளனர். இதனால் கொரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.