இன்றைய தினம் அதிகாலை 4 மணியளவில் தற்காலிகமாக பயணத்தடை நீக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக நடமாடுவதற்கு பொலிஸாரும், இராணுவமும் அனுமதி வழங்கி உள்ள நிலையில் மக்கள் பொருட்களை கொள்வனவு செய்வதில் ஆர்வம்காட்டிவருகின்றனர்.
- Advertisement -
அதன்படி யாழிலும் மக்கள் தமக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதில் மக்கள் நகர் பகுதிக்கும் வர்த்தக் நிலையங்களுக்கும் சென்றனர்.
- Advertisement -
இந்நிலையில் வீதிகளில் கூட்டம் கூட்டமாக நடமாடுபவர்கள் பாதுகாப்பு தரப்பினரால் எச்சரிக்கப்பட்டு அனுப்பப்பட்டுள்ளனர். அத்தியாவசிய பொருட்கள் விற்பனை நிலையங்களை தவிர ஏனைய வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளது.
நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வந்த பயணத்தடை காரணமாக யாழ் மாவட்டத்தில் உள்ள கூலித்தொழிலாளர்கள், பெண் தலைமைத்துவ குடும்பங்கள் மற்றும் சிறு மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமது தொழில் நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாத நிலையில், இவர்கள் பொருளாதார ரீதியில் பாதிப்படைந்துள்ளனர். எனவே தமக்கு நிவாரணம் வழங்க அதிகாரிகள் துரித நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை இன்று அதிகாலை 4 மணிக்கு தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ள பயணத்தடை மீண்டும் இன்று இரவு 11 மணிமுதல் எதிர் வரும் 7 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை பயணத்தடை அமுல்படுத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.