வடமாகாணத்தில் நேற்றைய தினம் 55 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
- Advertisement -
யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 642 பேரின் மாதிரிகள் நேற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
- Advertisement -
இதன்படி யாழ். மாவட்டத்தில் 9 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 20 பேரும், கிளிநொச்சி மாவட்டத்தில் 8 பேரும், வவுனியா மாவட்டத்தில் 11 பேரும், மன்னார் மாவட்டத்தில் 7 பேரும் அடையாளம் தொற்றாளர்களாக காணப்பட்டனர்.
அத்துடன் யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாக மாணவர்கள் 6 பேருக்கும் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.