அரசாங்கமும் சுகாதார துறையினரும் 90 வீதமான பணிகளைச் செய்திருந்தாலும், பொதுமக்களின் நடத்தையே கொரோனா வைரஸ் பரவக் காரணமாக அமைந்துள்ளதாக, பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.
- Advertisement -
அத்துடன், தற்போது நாட்டில் காணப்படும் நிலைமைக்கு அமைய, தொழிலுக்கு செல்லும் அனைவரும் வீடுகளிலும் முகக் கவசம் அணிய வேண்டும் எனவும், பொது சுகாதார பரிசோதகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- Advertisement -
இந்த நிலையில், நாட்டில் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு, பொதுமக்களின் ஒத்துழைப்பு அத்தியாவசியமானது என, தொற்றுநோயியல் பிரிவின் பிரதான வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.