முல்லைத்தீவு – முள்ளியவளை 1ம் வட்டாரத்தை சேர்ந்த சிறுமி ஒருவர் காணாமல்போயுள்ளதாக முல்லைத்தீவு பொலிஸாரிடம் முறையிடப்பட்டுள்ளது.
- Advertisement -
15 வயதான கிறிஸ்துராசா மிதுசிகா என்பவரை கடந்த 35 நாட்களாக காணவில்லை. இதுகுறித்து முள்ளியவளை பொலீஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.
- Advertisement -
விடயம் குறித்து முள்ளியவளை பொலிஸாரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றத்திற்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
படத்தில் உள்ள சிறுமியினை தெரிந்தவர்கள் அறியத்தருமாறு உறவினர்கள் கேட்டுள்ளனர்.தொடர்பு கொள்ள வேண்டிய இலக்கம் 0766758057